Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 18 March 2020

அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்!

அரசு ஊழியர் களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கே . சண்முகம் அவசர
கடி தம் அனுப்பியுள்ளார் .

கொரோனா வைரஸ் அறிகுறி தமிழகதலைமைச்செயலாளர்
கே . சண்முகம் , அனைத்து அரசுதுறை செயலாளர்களுக்கும் அனுப்பிய மிக அவசர கடிதத்தில் கூறப்பட்டிருப்ப தாவது : கொரோனாவைரஸ்பரவி வருவதை தடுக்கும் வகையில் , தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர் கள் மற்றும் பார்வையாளர்கள் தொ்மல் ஸ்கேனிங் ' என்ற பரிசோதனைக்கு உட்படுத் தெப்பட வேண்டும் . இதன்மூலம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட வேண்டும் . மேலும் , மிக அவசரமான பிரச்சினையாக இருந்தால் மட்டும் கூட்டங்களை அரசு  செயலாளர்கள் கூட்ட வேண்டும் . 

இல்லாவிட்டால் அந்தக்கூட்டங்களை தவிர்க்கலாம் . தினமும் அரசு துறை இயக்குனர்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை . வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் சளி , காய்ச்ச ல் , இருமல் , மூச்சு விடுவதில் சிரமம் போன்றபிரச்சினைகள் இருக் கும் பணியாளர்களை , அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ள அறிவுறுத்த வேண் டும் . இதன் மூலம் மற்றவர்க ளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் . | மேலும் , அப்படிப்பட்ட பணி யாளர்களை டாக்டர்கள் மூலம் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும் . ) மேலும் , அனைத்து பணி யாளர்களும் அடிக்கடி தங்கள் கைகளை சோப்பினால் குறைந்தபட்சம் 20 வினாடி கள் கழுவவேண்டும் . குளிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்த வேண்டும் .  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment