Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 11 March 2020

கொரோனாவை வீழ்த்தும் சீனா..! நோயை கண்டு பயப்பட தேவையில்லை...



மாட்டு கோமியம்  கொரோனாவை விரட்டும், நில வேம்பு கசாயம்தான் மருந்து, பிராய்லர் கோழியில் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதென பல வதந்திகளுக்கு நடுவே மருத்துவ சிகிச்சையில் வியக்கவைக்கும் சீனாவை அனைத்து நாடுகளும் பாராட்டும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் உண்மை.

எதிர்நீச்சல் போடும் சீனா:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா என்ற கொடிய வைரசால் யுஹான் மாகாணம் சூழப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வைரஸின் ஆதிக்கம் சீனா முழுக்க பரவி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்த போது கொரோனா வைரஸ் சிகிச்சைககாவே வெறும் பத்தே நாட்களில் 15 அவசர சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது. வைரசுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே மூண்ட போராட்டத்தில் இதுவரை 44,518 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீவிரத்தை தாண்டிய 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் எத்தனை?

கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் : 80,174

நோயிலிருந்து விடுபட்டவர்கள் : 44,518

பலி எண்ணிக்கை : 2,915

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 32,741

இந்த தகவலை அரசு கட்டுப்பாட்டில் உள்ள சீனா குளோபல் டிவி நெட்வொர்க்  வெளியிட்டுள்ளது. ஆனால் பல செய்திகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையும், கொரோனா வைரஸின் தீவிரமும்தான் கோடிட்டு காட்டப்பட்டு வருகிறது. மேலும் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் அச்சுறுத்தக்கூடிய வதந்திகளும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாட்டு கோமியத்தை குடித்துவிட்டு சிவன் மந்திரம் சொன்னால் கொரோனா வைரஸை விரட்டலாம் என பாஜக தலைவர்கள் மாறி மாறி மார்க்கெட் செய்த விவகாரம் சமீப காலமாக சர்ச்சையாகி வருகிறது.

கோமியம் தீர்வா?

இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் மாட்டு கோமியத்தை மூலிகையாக எடுத்துக்கொள்வதும், அதன் சாணத்தை வீட்டு உள் அல்லது வெளிப்புற பகுதிகளில் பூசுவது. இது இரண்டுமே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது மறுக்கமுடியாதுதான். ஆனால் அதனால் கொரோனா வைரஸை குணப்படுத்தமுடியும் என எந்த விஞ்ஞானிகளாலும் இதுவரை சொல்லப்படவில்லை. மாற்றாக மாட்டு சாணமும், கோமியமும் ஒற்றைத் தலைவலி அல்லது மனச்சோர்வு இந்த இரு பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக கூறப்படுகிறது. அதிலும் சாலைகளில் உள்ள குப்பைகளை உண்ணும் மாடுகளின் உபாதைகள் மூலிகைக்கு பயனற்றவை எனவும் கூறுகிறார்கள்.

இறைச்சியால் கொரோனா பரவுமா?

விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சீன அறிஞர்கள் சந்தேகித்தாலும், அசைவ உணவுகளில் அடு பரவக்கூடிய வாய்ப்பு உறுதியா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகவில்லை. அதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, '' பிராய்லர் கோழி, இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவுகளில் கொரோனா பரவ வாய்ப்பே கிடையாது. மேலும் 25 முதல் 30 செல்ஸியஸ் வெப்பநிலையில் கொரோனா வைரஸ் தாக்கு பிடிக்காது ஆகையால் மக்கள் உணவுகளை குறித்து பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சுகாதார துறை அதிகாரிகளும் இதையே தெளிவு படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

காஞ்சிபுரம்: ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மெல்ல மெல்ல சீராகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் அவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் யாருக்கும் இதுவரை கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல மதுரையிலும் ஒருவர் தொடர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்குமா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தீர்வு

கொரோனா; உயிர் கொல்லி வைரஸ் என்பதை விட, ஆரம்பத்தில் உரிய சிகிச்சை பெறுவதும், தொற்று ஏற்படாதவாறு மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை கையாளுவதுதான் உசிதமானது.கைகளை
அடிக்கடி சுத்தப்படுத்துவது முதல் கண்கள் மற்றும் மூக்கிலிருந்து கைகளை தள்ளியே வைத்திருப்பதும், தும்மல் மற்றும் இருமல் வரும் சமயங்களில் கைக்குட்டையை பயன்படுத்துவதும், மக்கள் நெரிசல் உள்ள இடங்களில் மிக கவனமாக சென்று வருவதும் தேவை.
அதே சமயம் பயம், பதட்டத்தை விலக்கி கொண்டாலே தெளிவு பிறக்கும்.

நன்றி...

No comments:

Post a Comment