1. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,
உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!
(நம்ம ஊரு டிசைன் அப்படி)
😜
2. கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை...!
(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)
😜
3. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!
(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)
😜
4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!
(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)
😜
5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
ஒரு தீ குச்சியின் மரணம்..!
(மரணம் ஒரு முடிவு அல்ல... !)
😜
6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!
(நிதர்சனமான உண்மை)
😜
8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!
(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)
😜
9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!
(எல்லாம் பீஸ் தான் காரணம்)
😜
10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!
(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)
😜
11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!
(லஞ்சம் தான் காரணம்)
😜
11. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!
(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)
😜
12. தூக்கம் வராமல் முதலாளி...
தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!
(கரன்சி பண்ற வேலை)
😜
13. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!
கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் கூட ? உங்களுக்குத் தெரியப்போவதில்லை...!
இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை
No comments:
Post a Comment