ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு.
அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.
🍁நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே...
நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள்.
🍁ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் ஆக வேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.
🍁துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது, என்று யோசித்தான்.
🍁அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தான்.
🍁அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் கதவை தட்டினான். திறந்த நண்பனிடம் விஷயத்தை சொல்லி அரண்மனைக்கு அழைத்தான்.
🍁என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டான், அவன்.
இவனுக்கு ஏமாற்றாமக போய் விட்டது. ரொம்பவும் நெருக்கமாக இருந்த இவனே இப்படி சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டான்.
🍁சரி, பரவாயில்லை. இன்னொரு நன்பனிடம் போவோம்... என்று முடிவு செய்து இரண்டாவது நண்பனை தேடி சென்றான்.
🍁இரண்டாம் நண்பனோ விஷயம் அனைத்தையும் கேட்டுவிட்டு அரண்மனை வாசல் வரைதான் நான் வருவேன். அங்கேயே நின்று கொள்வேன் அதற்கு மேல் வரமாட்டேன் என்று கூறினான்.
🍁அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதடனுமே அதுதானே முக்கியம்... என்று நினைத்தான்.
🍁எனவே அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான்.
அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான். விபரத்தை சொன்னான்.
🍁அவன் உடனே சட்டையை போட்டுக் கொண்டு "வா போகலாம்" என்று புறப்பட்டு விட்டான்.
🍁விசாரணையின் போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசி, விடுதலை வாங்கிக் கொடுத்தான்.
🍁ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு.
முதல் நபருக்கு பெயர், பணம்.
இரண்டாம் நபருக்கு பெயர், சொந்தம்.
மூன்றாம் நபர் அவன் செய்த
"நற்செயல்கள்"
🍁இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது.
சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும்.
அதாவது, நமக்கு பின்னாலும் நம்மைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.
🍁மனிதன் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்..
No comments:
Post a Comment