Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 17 April 2025

பத்தாம் வகுப்பு தமிழ் 2025- 26 ஆம் கல்வி ஆண்டில் குறைக்கப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகத்தில் உள்ள மாற்றங்கள் இயல் வாரியாக

 

இயல்:1

**************

இயல் ஒன்றில் அன்னை மொழியே பாடல் அதே மனப்பாடப் பகுதியோடு தொடர்கிறது பாவாணர் தமிழ் சொல் வளம் பாடத்தில் தொடக்கத்திலும் இறுதியிலும் சில மாற்றங்கள் உள்ளன இடைப்பகுதி அதாவது பயிர் வகைகள் கிளை வகைகள் உள்ளிட்ட அந்த இடைப்பகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. யார் இவர் என்ற பகுதியில் இளஞ்குமரனார் பற்றிய செய்தி நீக்கப்பட்டுள்ளது அடுத்து புயலிலே ஒரு தோணி அந்த பாடத்தில் உள்ள பெட்டி செய்திகள் நீக்கப்பட்டுள்ளன அதாவது புயலுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு இடம்புரி வலம்புரி என்பவை.

காலக்கணிதம் இயல் ஒன்றிற்கு வந்துள்ளது பாடப்பகுதியில் மாற்றம் இல்லை ஆனால் கற்பவை கற்றபின் பகுதியில் கதிர் வெடித்து என்கிற கண்ணதாசனின் தமிழ் வாழ்த்து பாடல் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் இலக்கணப் பகுதியில் அளபெடை நீக்கப்பட்டு விட்டது

 மேலும் இயல் ஒன்றிற்கு பின்னால் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் படிவம் இணைக்கப்பட்டுள்ளது கட்டுரை தமிழ் வளர்த்த சான்றோர் உள்ளது கலை திருவிழாவில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்து கடிதம் முழு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது


இயல்:2

**************

இயல் இரண்டைப் பொறுத்தவரை கேட்கிறதா என் குரல் பாடம் அப்படியே இருக்கிறது. ஹிப்பாலஸ் பருவக்காற்று  பற்றிய செய்தி மட்டும் நீக்கப்பட்டுள்ளது பரிபாடல் பழைய பாடப்பகுதி அப்படியே உள்ளது மேகம் என்கிற நாகூர் ரூமி அவர்களின் புதுக்கவிதை இடம் பெற்றுள்ளது பிரம்மம் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதை வீட்டிற்கு முன்னாடி முருங்க மரம் நடுதல் சார்ந்து ஒரு கதை தொகாநிலைத் தொடர் இலக்கண பகுதி அப்படியே தொடர்கிறது இரண்டாவது இயலுக்கு பின்னால் தன் விவர படிவம் மற்றும் நூலகம் வேண்டி கடிதம் முழு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது


இயல்:3

**************

இயல் மூன்றில் விருந்து போற்றுதும் பாடம் சில மாற்றங்களோடு தொடர்கிறது அந்த பாடத்தில் உள்ள பல செய்யுள் வரிகளில் சில நீக்கப்பட்டு விட்டன. குறிப்பாக சிலப்பதிகாரம் கம்பராமாயணம் கலிங்கத்துவரணி இன்மையிலும் விருந்து என்கிற தலைப்பில் இடம் பெறக்கூடிய செய்யுள் வரிகள் அவ்வையார் பெற்ற உணவு குறித்த செய்யுள் வரிகள் அதன் பிறகு திண்ணை வைத்து கட்டும் வழக்கம் பற்றிய செய்தி இப்படி சில நீக்கப்பட்டு அந்த பாடம் தொடர்கிறது

காசி காண்டம் அதே பாடல் மனப்பாடப் பகுதியாக தொடர்கிறது முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் அதே பாடல் மனப்பாடப் பகுதி  அந்தஸ்தை இழந்து தொடர்கிறது

இந்த பாடத்தின் கற்பவை கற்றபின் பகுதியில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடலை பொருள் புரியும் வகையில் பிரித்து அதே பாடலாக கொடுத்துள்ளார்கள்

கோபாலபுரத்து மக்கள் கதையும் தொகை நிலை தொடர் இலக்கணப் பகுதியும் மாற்றம் இன்றி தொடர்கின்றன.


மேலும் திருக்குறள் பகுதியும் 5 மனப்பாடப் பகுதியை திருக்குறள் மாற்றம் இன்றி தொடர்கின்றன கூடுதலாக திருக்குறளின் பின் உவமையணி எடுத்துக்காட்டு உவமையணி முழுமையான விளக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது


இயல்:4

**************

இயல் நான்கை பொறுத்தவரை மொழிபெயர்ப்புக் கல்வி படத்தில் மாற்றமில்லை திருவிளையாடல் புராணம் அதே மனப்பாட பகுதியோடு தொடர்கிறது புதிய நம்பிக்கை கதை அப்படியே தொடர்கிறது இலக்கணம் பொது தன்மை முன்னிலை படர்க்கை வழு வழாநிலை வழுவமைதி  ஆகியவற்றோடு தொடர்கிறது


நான்காவது இயல் முடிந்த பின் நூலக உறுப்பினர் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது


இயல்:5

**************

இயல் ஐந்தை பொருத்தவரை பன்முக கலைஞர் பாடம் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது கம்பராமாயணம் ஒரு பாடல் குறைந்து ஐந்து பாடல்களாக அதே இரண்டு மனப்பாடப் பாடல்கள் உடன் தொடர்கிறது அங்கு வறுமையில்லாததால் என்கிற பாடல் நீக்கப்பட்டு விட்டது

பாய்ச்சல் துணைப்பாடம் அப்படியே தொடர்கிறது  இலக்கணம் அகப்பொருள்  பாட வடிவம் மட்டும் மாற்றப்பட்டு தொடர்கிறது அதாவது  முன்பு உரையாடல் வடிவில் இருந்தது  அது தற்போது தலைப்புகள் கொடுத்து அதற்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் 5 திணைக்குரிய உரிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்தாவது இயலும் பின் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது அதே ஐந்து மனப்பாடப்பகுதி திருக்குறளுடன் தொடர்கிறது இங்கும் திருக்குறள் முடிந்த பின்னர் சொல் பின்வருநிலையணி சொற்பொருள் பின்வருநிலையணி உவமையணி வஞ்சப்புகழ்ச்சி அணி போன்ற அணிகளுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன


இயல்:6

**************

இயல் ஆறைப் பொறுத்தவரை சிற்றகல் ஒளி பாடம் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது சிலப்பதிகாரம் அதே மனப்பாடப் பகுதியோடு தொடர்கிறது ஒன்பதாம் வகுப்பில் இருந்த முத்தொள்ளாயிரம் அதே மூன்று பாடல்களும் அதில் அல்லல் பழனத்து என்கிற மனப்பாடப் பகுதி பாடலும் இந்த இயலில் இடம் பெற்றுள்ளது

மங்கையராய் பிறப்பதற்கே என்கிற விரிவானமும் மாற்றும் இன்றி தொடர்கிறது அடுத்து புறப்பொருள் இலக்கணம் பாட வடிவம் மாற்றப்பட்டு உரையாடல் வடிவமாக இல்லாமல் தலைப்புகள் கொடுத்து கீழே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

இந்த இயலின் பின்னால் மேல்நிலை வகுப்பு சேர்க்கை படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.


இயல்:7

**************

இயல் ஏழில் சங்க இலக்கியத்தில் அறம் பாடம் மாற்றம் இன்றி தொடர்கிறது தேம்பாவணி அதே மனப்பாடப் பகுதி பாடலோடு மாற்றம் இன்றி தொடர்கிறது ஒன்பதாம் வகுப்பில் வந்த அக்கறை பாடல் மனப்பாடம் பாடலாக இல்லாமல் தொடர்கிறது ராமானுஜர் விரிவானம் மற்றும் பாவகைகள் இலக்கணம் மாற்றம் இன்றி தொடர்கின்றன.

No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025