தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்படும் வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடுத்த கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வுகள் மாணவர் சேர்க்கை ஆகியவற்றினை தொடங்க உள்ளது.
அதனால் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி சேர்க்கைக்கு மிக அவசியமான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதன் மூலமாகவே மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கையினை மேற்கொள்ள முடியும் என்பதனால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களில் தங்களின் பிறந்த தேதி, தேர்வு எண் போன்ற தகவல்களை உள்ளீடு செய்து தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.
No comments:
Post a Comment