பிரம்ம ஹத்தி தோஷத்தை விட வலிமையான தோஷம் ஆத்ம ஹத்தி தோஷம் பிரம்மஹத்தி தோஷம் எதனால் வருவது என்றால் ஒருவரை கொலை செய்வதன் மூலம் வரக்கூடிய அமைப்பு என்ற வாழ்நாளில் பலம் நபர்கள் பல கொலை செய்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புழு பூச்சி இருந்து மனிதர்கள் வரைக்கும் கொலை செய்வது குற்றம் தான் அதைத்தான் பிரம்மஹத்தி தோஷம் என்று சொல்கிறார்கள் ஆனால் நான் சொல்வதோ பிரம்மகத்திதோஷம் அல்ல பிரம்மஹத்தி தோஷத்தை விட வலிமையான தோஷம் ஆத்ம ஹத்தி தோஷம் பிரம்மஹத்தி தோஷத்திற்கு கூட பரிகாரங்கள் பூஜைகள் நிறையாக உள்ளது ஆத்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரமும் பூஜைகளோ எதுவும் இல்லை
♥ இப்போது ஆத்மகத்தி தோஷம் எதனால் வருகிறது என்று பார்ப்போம் #ஒருவர்_தவறேசெய்யாமல்இருப்பார்கள்அவர்களை_மனதை_வேதனைப்படுத்தும்_அளவிற்கு_வார்த்தைகளால் #காயப்படுத்துவது_அவரைமனம்_துன்பபடுத்தும்_அளவிற்கு_கடுமையான #சொற்களாலும்_உங்கள்_நாவில்வரும்பேச்சாலும்_அவரை_வேதனைப்படுத்தும்பொழுது_மனம்_என்பதுதுன்பப்படுகிறது #மனம்ஆத்மாவுடன்_சம்பந்தப்பட்டது_ஒருநபரால்_மனம்_அதிகப்படியான_துன்பம் ஏற்பட்டால் அவர் ஆத்மாவும் துன்பத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தம் ஒருவரை #ஆத்மாவை_துன்பப்படுத்துவது_தான் #ஆத்மஹத்தி_தோஷம் ஒருவரை கொலை செய்து விட்டால் கூட அவருடைய வழி வேதனை என்பது ஒரு நிமிடம் தான் ஆனால் ஒருவரை மனதால் காயப்படுத்துவது வேதனைப்படுத்துவது அந்த நபரை வாழ்நாள் முழுவதும் அவர் மனம் துன்பப்பட்டு கொண்டே இருக்கும் அதன் காரணமாகவோ அவர் ஆத்மாவும் மிகவும் வேதனையை சந்திக்கும்
♥ஒரு ஆத்மாவை துன்பப்படுத்துவது அந்தப் பரமாத்மாவை துன்பப்படுத்துவதற்கு சமம் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளையும் பிள்ளைகள் பெற்றோர்களையும் கணவன் மனைவியும், மனைவி கணவனையும் உங்க சுற்றிருக்கும் நண்பர்களையும் கடுமையான சொற்கள் சென்று பேசுவது அவர்கள் மனதை வேதனைப்படுத்துவது ஆத்மா ஹத்தி தோஷத்திற்கு சமமாகும் இதற்கு விமோசனம் என்பது இல்லை கொலை செய்தால் கூட பிரம்மஹத்தி தோஷத்தை கூட சில வழிபாடு உண்டு ஒருவரின் மனதை காயப்படுத்தி வேதனைப்படுத்தக் கூடிய பரிகாரம் எந்த ஜோதிடர்களிலும் இல்லை கடவுளிடம் கூட இல்லை அந்தத் தவறுக்கான தண்டனையை இந்தப் பிறவியிலோ அடுத்தது அடுத்த பிறவியில்லையோ அந்த நபர் அனுபவித்தே தீருவார் இந்தப் பாவம் அவரை மட்டுமல்ல அவர் பரம்பரையும் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும் யாரும்
♥அடுத்தவர்களை காயப்படுத்தும் சொற்களால் பேச வேண்டாம் அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப நபர்களுக்கும் அனைவரும் ஒரு காலகட்டத்தில் நீங்கள் எப்படி ஒரு நபரை பேசி கஷ்டப்படுத்தும் வேதனையை கொடுத்து உள்ளீர்களோ அதற்கு நிகரான வேதனை நீங்கள் உங்கள் குடும்பம் ஒரு காலகட்டத்தில் கட்டாயம் அனுபவிக்கும் மரணம் கூட வழியில் இருந்து நிவாரணம் கொடுக்கும் ஆனால் உங்களை மனதால் காயப்படுத்துவது வேதனைப்படுத்துவது அவருக்கு நிவாரணம் என்பது இல்லை நம்ம ஊர்ல ஒரு பழமொழி உள்ளது நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம்
சொல்லை கொட்டினால் அள்ளி விட முடியாது நீங்கள் பேசும் வார்த்தைகள் துன்பப்படுத்தும் எனில் காயப்படுத்தும் எனில் சில பேர் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தாங்க முடியாமல் தற்கொலை செய்யவும் போவார்கள் இதுபோல் பல குடும்பத்தில் பல தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளது யாரையும் மனதால் காயப்படுத்தாமல் இருப்பதே உங்கள் கடவுளுக்கு செய்யும் மிகப்பெரும் திருப்பணி
♥ நீங்கள் மந்திரங்களை ஜெபிக்க வேண்டாம் யாகம் வளர்க்க வேண்டாம் பூஜை செய்ய வேண்டாம் ஒருவரை சொற்களால் காயப்படுத்தாமல் இருப்பதே அவர் ஆத்மாவை காயப்படுத்தாமல் இருப்பதே அந்தப் பரமாத்மாவை துன்பப்படுத்தாமல் இருப்பதே அவருக்கு செய்யும் மிகப் பெரும் திருப்பணி ஆனால் இங்கு பல பேர் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்வதுதான் குற்றம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதைவிட பெரிய குற்றங்களை அவர்கள் சொந்த வீட்டிலே இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் கடவுளை வணங்குபவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரையும் அவமதிக்க வேண்டாம் அது அந்த கடவுளையும் அவமதிப்பதற்கு சமம்
No comments:
Post a Comment