நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.
நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே.
பாதாம்:
இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.
இஞ்சி:
இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
பூண்டு:
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
கீரை:
அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
கேரட்:
கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
பேரீச்சம்பழம்:
உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.
நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே.
பாதாம்:
இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.
இஞ்சி:
இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
பூண்டு:
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
கீரை:
அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
கேரட்:
கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
பேரீச்சம்பழம்:
உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.
காய்கறிகள் கிடைக்காத சமயத்தில்...
காய்கறி வாங்க வெளியே போனாலே கொரனா பரவும்.
காய்கறி கடைகளில் ஏதாவது பாதுகாப்பு
இருக்குதா..???
எதையும் தொடக்கூடாது னு சொல்றாங்க.
யாராவது கேக்குறாங்களா..???
பத்து நாள் காய்கறி சாப்பிடலைனா உடம்புல ஒன்னும் ஆகிடாதுங்க. பெருசா எந்த மாற்றமும் இருக்காது. உடல் புத்துணர்ச்சி பெறும்
பருப்புலயே பத்து விதமா சமைக்கலாம்
கொள்ளு ரசம் சிறந்த ஆன்டி பயோடிக். அதுக்கு காய்கறிகள் தேவையே இல்லை...
உப்பு பருப்பு சீரகம் போட்டு வைக்கலாம். எதிர்ப்பு சக்தி கூடும்...
தட்டைப்பயறு குழம்பு, மொச்சை குழம்பு எல்லாமே சிறந்த வைட்டமின் மற்றும் புரத உணவுகள்...
இட்லி தோசை + தேங்காய் சட்னி இஞ்சி போட்டு வெக்கலாம்
பருப்புல பூண்டு சேர்த்து சமைக்கலாம்
வகை வகையா ரசம் வைக்கலாம்
நிலக்கடலை சட்னி, எள்ளு சட்னி, உளுந்து சட்னி, பாசிப்பயறு சட்னினு காய்கறி இல்லாத சைடிஷ்கள் ஏராளம்.
சந்தகை, கொழுக்கட்டை, பனியாரம், சப்பாத்தி, பூரி, ராகி களி, கோதுமை களி, சோள மாவு தோசை, பாசி பயறு தோசை, கம்மஞ்சோறு, ராகி கூழ், சோள அம்புலி, கம்மங்கூழ்
னு பெரிய லிஸ்ட்டே போடலாம்
காய்களில் பூசணிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை ஒன்று முதல் இரண்டு மாசம் தாங்கும்.
இதுல எதுக்குமே தினசரி கடைக்கு போக தேவையில்லை. ஒருமுறை வாங்கி வைத்தால் போதும்.
சொகுசு வாழ்வை விடுத்து ,
குழந்தைகளுக்கு வறுமையை சொல்லித்தர பழகுவோம். நெருக்கடி நேரத்தில் வாழக்கையை சமாளிக்க கற்றுத்தர இதுமாதிரி வாய்ப்பு கிடைக்காது.
2.
காய்கறிகள் கிடைத்தால்
காலையில் வீட்டில் சாதம் வடியுங்கள்.. (குக்கரில் அல்ல பழைய முறைப்படி) கிடைக்கும் சுடு கஞ்சியை காலை உணவாக இஞ்சித் துவையலுடன் குடியுங்கள்..
மதியம் சிம்பிளாக இரசம் ஒரு காய் (கூட்டோ பொரியலோ) போதாததற்கு அதே இஞ்சித் துவையலும் வைத்துக் கொள்ளவும்
இரவு இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று இட்லி எனில் 5
தோசை & சப்பாத்தி எனில் 3..
இது ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சமைக்கும் சமையல்.!
வீட்டில் வெல்லம் இருந்தால் அதை நீருடன் கலந்து பானகம், அல்லது எலுமிச்சை ஜுஸ், கரைத்து வைத்துக் கொள்ளவும்..
முடிந்தவரை டீ குடிக்கும் அதே சூட்டில் வெந்நீர் அருந்தவும்..
பஜ்ஜி, போண்டா, வடை போன்ற ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்..
சுடுகஞ்சி போரடித்தால் சில நாட்களுக்கு மாற்றாக பிரட் & ஜாம் சாப்பிடவும்..
அசைவம் தவிர்க்க முடியாதவர்கள் மீன் குழம்பு மட்டும் வைத்து சாப்பிடவும் (10 நாட்களுக்கு ஒரு முறை)
முட்டை உபயோகித்தால் காலையில் ஃபிரேக் பாஸ்ட் அப்போது மட்டும் சாப்பிடவும்..
அதிக பட்சமாக வாரத்தில் இரு நாட்கள் முட்டை உபயோகித்தால் போதும்..
குருணை அரிசி கஞ்சி, வரகரிசி பொங்கல், சாப்பிடலாம்..
அடுப்பில்லாத சமையல் எனில் வெள்ளைப் பூசணியை தோல்சீவி அதைத் துருவி..
நீரில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு அதை நன்கு பிழிந்தெடுத்து தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும்.. இது தயிர் சாதத்தை விட சுவையாக இருக்கும்..
ஊறுகாய் எனில் எலுமிச்சை, நார்த்தங்காய், கோங்குரா மட்டும் தொட்டுக் கொள்ளவும்.!
கோதுமை ரவா உப்புமா சாப்பிடுவது மிகவும் உத்தமம்.!
குழந்தைகளுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அந்த உப்புமாவில் காரட், பட்டாணி, சிறிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
கொஞ்சம் இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு (பொடிசெய்து) சேர்க்கவும்..
தேங்காய் சட்னி குழந்தைகளுக்கு மட்டுமே.! பெரியவர்கள் புதினா & கொத்தமல்லி அல்லது இஞ்சி சட்னி சேர்க்கவும்..!
வேப்பிலைப் பொடியும் நல்லெண்ணெயும் இன்னும் சிறப்பு...
அப்பளத்தை பொரிக்காது சுட்டு பயன்படுத்தவும்..
பிரண்டை, சுண்டைக்காய் வத்தக் குழம்புகள் இன்னும் சிறப்பு.. முடிந்தால் அதில் இரண்டு கடுக்காயைப்..
பொடி செய்து சேர்க்கவும்.. வேப்பிலைக் கொழுந்தும் சிறிது அரைத்து வத்தக்குழம்பில் சேர்க்கலாம்..
வாரம் ஒரு முறை கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு புளிக்குழம்பு வைக்கவும்..
பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் போட்டு கூட்டு வைப்பதும் சாலச் சிறந்தது.!
மிளகு இரசமும் எலுமிச்சை இரசமும் வாரம் முழுவதும் வைக்கலாம்.!
பாகற்காயை வட்டமாக சீவி மஞ்சள்தூள் தடவி வதங்கல் செய்யலாம்.!
தக்காளி, கத்திரிக்காயின் உபயோகம் குறைவாகவே இருக்கட்டும் (ஈஸ்னோபீலியா)
முருங்கை, அவரை, நூக்கல், பீட்ரூட், காரட், பொடி பாகற்காய், முள்ளங்கி ஆவாரம் பூ, மணத்தக்காளி, சிறுகீரை, வெந்தயக்கீரை கிடைத்தால் யோசிக்காமல் வாங்கிவிடவும்.!
சிக்கன் & மட்டன்.!!! பாவம் அந்த உயிர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழட்டுமே.!
இங்கு நான் சொன்ன அனைத்து காய்கறிகளும்..
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகள்.!
இதை வீட்டில் உங்களால் முடிந்த அளவு சமைத்து முயன்று பாருங்கள்.!
அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..!
No comments:
Post a Comment